காற்றே என் வாசல் வந்தாய்



ஆண்:காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாக கதவு திறந்தாய்

காற்றே உன் பேரை கேட்டேன்

காதல் என்றாய்

நேற்று நீ எங்கிருந்தாய்

காற்றே நீ சொல்வாய் என்றேன்

ஸ்வாஸத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்


பெண்:துள்ளி வரும் காற்றே

துள்ளி வரும் காற்றே

தாய் மொழி பேசு

நிலவுள்ள வரையில்

நிலம் உள்ள வரையில்

நெஞ்சினில் வீசு


துள்ளி வரும் காற்றே

துள்ளி வரும் காற்றே

தாய் மொழி பேசு


காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாக கதவு திறந்தாய்

காற்றே உன் பேரை கேட்டேன்

காதல் என்றாய்


ஆண்:கார்காலம் அழைக்கும் போது

ஒளிந்து கொள்ள நீ வேண்டும்

தாவணி குடை பிடிப்பாயா


பெண்:அன்பே நான் உறங்க வேண்டும்

அழகான இடம் வேண்டும்

கண்களில் இடம் கொடுப்பாயா


ஆண்:நீ என்னருகில் வந்து நெளிய 

நான் உன் மனதில் சென்று ஒளிய 

நீ உன் மனதில் என் உருவம்

கண்டு பிடிப்பாயா


பெண்:பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்

காதலர் வாழ்க 

பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்

காதலர் வாழ்க 


ஆண்:பூமிக்கு மேலே வான் உள்ள வரை ில்

காதலும் வாழ்க 


ஆண்:காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாக கதவு திறந்தாய்

காற்றே உன் பேரை கேட்டேன்

காதல் என்றாய்


பெண்:நேற்று நீ எங்கே இருந்தாய்

காற்றே நீ சொல்வாய் என்றேன்

ஸ்வாஸத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்


பெண்:நெடுங்காலம் சிப்பிக்குள்ளே 

உருண்டு நிற்கும் முத்து போல்

என் பெண்மை திறந்து நிற்கிறதே


ஆண்:திறக்காத சிப்பி என்னை

திறந்து கொள்ள சொல்கிறதா

என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே


பெண்:நான் சிறு குழந்தை 

என்று நினைத்தேன்

உன் வருகையினால் 

வயதறிந்தேன்

என்னை மறுபடியும்

சிறு கிள்ளையாய் செய்வாயா


ஆண்:கட்டில் இடும் வயதில்

தொட்டில் இட சொன்னால்

சரியா சரியா 

கட்டில் இடும் வயதில்

தொட்டில் இட சொன்னால்

சரியா சரியா 


பெண்:கட்டிலில் இருவரும் குழந்தைகள்

ஆனால் பிழையா பிழையா


ஆண்;காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாக 


பெண்:காற்றே உன் பேரை கேட்டேன்

காதல் என்றாய்


கோரஸ்:துள்ளி வரும் காற்றே

துள்ளி வரும் காற்றே

தாய் மொழி பேசு

நிலவுள்ள வரையில்

நிலம் உள்ள வரையில்

நெஞ்சினில் வீசு


கோரஸ் & பெண்:துள்ளி வரும் காற்றே

துள்ளி வரும் காற்றே

தாய் மொழி பேசு


கோரஸ்:துள்ளி வரும் காற்றே

துள்ளி வரும் காற்றே

தாய் மொழி பேசு